Sunday 7 April 2013

ஆன்மாவின் அலறல்





அன்றொரு குழந்தை 
அழுத விழிகளோடு 
அம்மணமாய் அலறியோடி 
நிழற்படமானது 
வியட்நாமில்... 
அமெரிக்கா அதிர்ந்தது..! 

மற்றொரு குழந்தை 
மலர்ந்த முகத்தோடு 
பழுதான 
பள்ளி வாகனத்தாலேயே 
பலி ஆனது 
சென்னையில்... 
பெற்றோர் உலகம் 
பெட்ரோல் ஆனது ! 

இன்றொரு குழந்தை 
அமைதியாய்... 
அப்பாவியாய்... 
அரக்கர்களால் 
மரணம் தின்று 
புகைப்படமானது 
இலங்கையில்... 
தமிழுலகம் 
எதிர்த்து எழுந்தது..! 

எப்போதும்... 
உறங்கும் நம் 
உளச் சான்றை உசுப்ப -ஒரு 
மழலையின் 
மரண ஓலம் தேவைப்படுவதென்பது ..? 
மனித ஆன்மாவை 
கேள்விக் கணைகளால் 
துளைக்கிறது...!

No comments:

Post a Comment